Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 14 ஜனவரி, 2012

திருக்குறள் - ஒலி வடிவில்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்து விளக்குகிறது.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருவள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது. திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர். தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது . இந்த சிலையை வடிவமைத்தவர் , பிரபல சிற்பி , கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி , கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.

இத்தனை சிறப்பான திருக்குறளின் மீது சமீக காலபமாக எனக்கு மிக பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. திருக்குறளைப் படிக்க படிக்க அதன் மீது ஈர்ப்பு அதிகமாக ஆகிக் கொண்டிருக்கிறது.”ஒரு மனிதன், எப்படி எல்லா விடயத்தையும் இப்படி சிறப்பாக சொல்ல முடியும்”, என்று வியப்பில் ஆழ்ந்து கொண்டு இருக்கிறேன். நம் மக்கள் இதனை படித்து, அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைப் பின்பற்றி வாழவேண்டும். திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி இருக்கிறார்கள். ஆனாலும், நானும் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போது தான் அதன் சுவையை நான் முழுமையாக உணர முடியும். ஆனால், அதை நான் முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.

திருக்குறளின் அதிகாரங்கள் மூன்று பெரும் பகுதியைக் கொண்டது.
1) அறத்துப்பால்/ The Worthiness of Virtue
2) பொருட்பால்/ World and Wealth
3) காமத்துப்பால்/ Pristine Path leading to Love-Perfection


சில தினங்களுக்கு முன்பு எனக்கு திருக்குறள் ஒலி வடிவில் கிடைத்தது. பாடல்களும், அதன் எளிமையான விளக்கமும் இருக்கிறது. உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சிறிதாக, சிறிதாக அனைத்து அதிகாரத்தின் ஒலி வடிவையும் வெகு விரைவில் இணைத்து விடுவேன். கேட்டு மகிழுங்கள். இதை உருவாக்கியவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை நம் தாய்மொழயில் கேட்டு பயன் அடைவது பேரின்பம் தருவதாகும்.

1) அறத்துப்பால்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages