Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

இரண்டு குரல்

உழைத்தது போதும் ஒய்வேடு என்று
ஒரு குரல் கேட்கிறது

வேலையை முடித்து விட்டு நிம்மதியாய் ஒய்வேடு என்று
மறு குரல் கேட்கிறது

எந்த குரலை நான் கேட்க
குழம்புது என் மனம்

ஒய்வேடுக்க துடிக்குது உடல்
அதனால் முதல் குரலை கேட்கவா

இன்னும் சிறிது வேலை தான் என்கிறது மனம்
அதனால் இரண்டாவது குரலை கேட்கவா

குழம்பினேன் மனம் வருந்தினேன்
தூக்கம் ஒரு புறம் அழைக்க
லட்சியம் மறு புறம் அழைக்க

லட்சியதை ஒதுக்கி வைத்து தூங்க மனமில்லை
தூக்கத்தை ஒதுக்கி வைத்து லட்சியத்தை காக்க உடல் ஒத்துழைப்பு தரவில்லை

உடல் ஒய்வை தானே நாடும்
என்று மனம் நம்பினால் உறக்கம் தானே வரும்

மனதை இழுத்தேன்
என் வசம் இழுத்தேன்

இரண்டாவது குரலை
முற்றிலுமாய் அழித்தேன்

உழைத்தேன் உறங்காமல் உழைத்தேன்
லட்சியத்தை காத்தேன்

லட்சியத்தை காத்த மகிழ்ச்சியில்
முழு மனதுடன் நிம்மதியாய் தூங்கினேன்

எப்போதும் ஒரு குரல்
நம் நலனுக்கு எதிராகவே இருக்கும்

அந்த குரலை அறிந்து
அழித்தால் தான் உனக்கு நலமாக இருக்கும்

உழைத்து விட்டு நிம்மதியாய் ஒய்வேடு என்று
ஒரே குரல் தான் கேட்கிறது

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages