Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நினைவுகளை வளர்த்தேன்!!

தந்தையின் வற்புறுத்தலால் தன் காதலனை வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாள் காதலி. அப்போது காதலன் பாடுகிறான்....


என் மனைவி நீ என்று நினைத்தேன்
பல நினைவுகளை வளர்த்தேன்.

கணவன் என்றே நீயும் நினைத்தாய்
பல கனவுகளை வளர்த்தாய்

இருவரும் வளர்த்தோம் ஆசைகளை
வரும் ஆபத்து தெரியாமலே

சந்தோஷம் தொடர்ந்தது
வர போகும் தூக்கம் பற்றி தெரியாமலே

இனிமை தொடர்ந்தது
வர போகும் கொடுமை பற்றி தெரியாமலே

என் மனைவி நீ என்று நினைத்தேன்
பல நினைவுகளை வளர்த்தேன்

காலம் வேகமாக ஓடினது
நமக்கு துன்பம் விரைவில் வர வேண்டும் என்பதாலா?

ஒவ்வொரு நாளும் புதுபுது மகிழ்ச்சி
வர போகும் நாளில் அது இருக்காது என்பது தெரிந்ததாலா?

தினம் தினம் உன் சமையலில் ருசியாய் சாப்பிட்டேன்
வர போகும் நாளில் அது கிடைக்காது என்பதாலா?

ஒவ்வொரு நாளும் உன்னை பாட வைத்து பதிவு செய்தேன்
இனிமேல் உன் பாட்டை நான் நேரடியாக கேட்க முடியாது என்பதாலா?

உன் கண்களை பார்க்கும் போதெல்லாம் என்னை மறந்தேன்
விரைவில் உன்னையே மறக்க வேண்டும் என்பதாலா?

தந்தையை தூக்கி எறிந்து விட மனம் இல்லாத நீ
என்னை எறிந்து விட எப்படி துணிந்தாய்

நீ இல்லாமல் நான் வாழமாட்டேன் என்று அறிந்திருந்தும்
என்னை கொன்று விட நினைத்தாய் உன் தந்தைக்காக

என் மனைவி நீ என்று நினைத்தேன்
பல நினைவுகளை வளர்த்தேன்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages