Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

நான் பார்த்தது என்ன? -> பகுதி ->இரண்டு


நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பூட்டு ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் கேட்டின் வெளியே யாரும் நிற்கவில்லை. எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கும் போது நடுங்கி போய் விடுவார்கள். நான் மட்டும் விதிவிலக்கா? என்னுடைய உடல் முழுவதும் நடுங்க தொடங்கியது. முகத்தில் இருந்து வியர்வை கொட்டியது. சில வினாடிகள் உயிரற்றவன் போல் நின்றேன். தொடர்ந்து அந்த பூட்டு ஆடும் காட்சியைப் பார்த்தால், பயத்தில் என்னுடைய உயிரையே இழக்க நேரிடும் என்பதை நான் உணர்ந்தேன்.

என்னுடைய அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை நிறுத்தி விட்டு, படுக்கையில் படுத்தேன். பூட்டு எவ்வாறு ஆடுகிறது என்ற மர்மம் அறியாமல், தூக்கம் எப்படி வரும்? அந்த சத்தம் சிறிது நேரம் நீடித்தது. பிறகு அந்த சத்தம் நின்றது. தைரியத்தை வர வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக பார்த்தேன். பூட்டு ஆடவில்லை. பிரச்சனை தீர்ந்து விட்டது என்று என்னால் நினைக்க முடியவில்லை. மனம் ஒரு குரங்கு என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். ஆனால் இந்த மாதிரி நேரங்களில், மனம் வெறி பிடித்த குரங்கு போல் ஆகி விடுகிறது.

என்னுடைய மனம் பல விதங்களில் யோசித்து கொண்டிருந்தது. கடைசியில் என்னுடைய மனம் அந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடுத்தது. பேய் தான் இதற்கு காரணம் என்று என்னுடைய மனம் முடிவு செய்தது. இனிமேல் நான் எவ்வாறு தூங்க முடியும்? என்னால் தைரியமாக என்னுடைய கண்களைக் கூட மூட மூடியவில்லை. என்னதான் பேய் இல்லை என்று பேசினாலும், அந்த சம்வத்தை பார்த்த பின் பேய் இல்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை.

பயம் அதிகமாக இருந்ததால் கண்களை திறந்தே வைத்து இருந்தேன். எப்போழுது விடியும் என்று காத்திருந்தேன். அடிக்கடி மணியை பார்த்தேன். கடைசியாக பார்க்கும் போது மணி 4. அதன் பிறகு நான் பார்க்கும் போது மணி 6. தூங்க மாட்டேன் என்று படுத்து இருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இரண்டு மணி நேரம் தூங்கி இருந்தேன். கிடைத்த வரை லாபம் தான் எண்று எண்ணி படுக்கையை விட்டு எழுந்தேன்.


அடுத்த பகுதி

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages