Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

நான் பார்த்தது என்ன? -> பகுதி - ஒன்று


This is the first part of the story
அன்று இரவு சாப்பிட்டு விட்டு என்னுடைய அறைக்கு சென்றேன். தினமும் இரவு என்னுடைய இமெயில் கணக்குகளை பார்ப்பது வழக்கம். அன்று அந்த வேலைகளை முடிக்க மணி பன்னிரெண்டு ஆகி விட்டது. அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது. யாரோ கேட்டில்(gate) உள்ள பூட்டை தட்டுவது போல் சத்தம் வந்து கொண்டு இருந்தது. கேட்டை தட்டினால் அல்லது calling bellஐ அழுத்தி இருந்தால், நான் போய் கதவை திறந்து இருப்பேன்.

ஆனால் பூட்டை தட்டும் சத்தம் வந்தததால் நான் பயந்து கொண்டு இருந்தேன்.அந்த சத்தம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. பூட்டை உடைத்து ஏவரேனும் வீட்டின் உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் மேலொங்கி இருந்தது. என்னுடைய இதயம் பயத்தின் காரணமாக வேகமாக துடித்தது. ஜன்னல் வழியாக பார்ர்தால், யார் பூட்டை தட்டுகிறார்கள் என்று தெரியும். ஆனால் பார்ப்பதற்கு பயந்து கொண்டு இருந்தேன்.

கேட்டின் மிக அருகே என்னுடைய அறை இருந்தததால், அந்த சத்தம் எனக்கு மட்டும் தான் கேட்டது.வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. எனவே சகோதரர்களை கூப்பிட்டு நடப்பதை சொல்வது தான் நல்லது என்ற எண்ணம் தோன்றியது.என்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து, அவர்கள் தூங்கி கொண்டு இருக்கும் இடம் நோக்கி சென்றென்.அவர்கள் ஆழ்ந்து தூங்கி கொண்டு இருந்தார்கள். அவர்கள் தூக்கத்தை கலைக்க என் மனம் விரும்பவில்லை.

மீண்டும் என்னுடைய அறைக்கு வந்தேன். அந்த சத்தம் தொடர்ந்து கொண்டு இருந்தது. என் மனதில் தைரியத்தை வர வைத்து கொண்டேன். யார் பூட்டை தட்டுகிறார்கள் என்று ஜன்னல் வழியாக பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஜன்னலை நோக்கி நடந்தேன்.கேட்டை குறி வைத்து என்னுடைய தலையும், கண்களும் திரும்பின.யார் என்று பார்த்தேன்.அந்த நிமிடம் என்னுடைய இதயமே நின்று விட்டது. நான் உறைந்து போனேன்.

நான் பார்த்தது என்ன???
அடுத்த பகுதி

2 கருத்துகள்:

Krishna Shasankar சொன்னது…

i m dumb at tamil but let me guess it , theru nai ya?

ana சொன்னது…

hahahaah very nice!!! pakathu veetu ponna????...;)

Post Top Ad

Your Ad Spot

Pages