Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

இரு கண்கள்

காதலியின் தந்தை மறுத்ததால், பிரிந்து விட்டது இந்த காதல் ஜோடி. சோகத்தில் பாடுகிறார் காதலன்.....

உன்னை நினைத்தால் மகிழ்ச்சியும் வருது
உன்னை நினைத்தால் சோகமும் வருது

உன்னுடன் வாழ்ந்த நாளை நினனக்கும் போது
மகிழ்ச்சி பொங்கி வருது

உன்னை பிரிந்து வாடுவதை நினைக்கும் போது
கண்ணில் தண்ணீர் வருது

உன்னால் தானே நான் வாழ்கிறேன்
உன்னை விட்டு எப்படி நான் வாழ்வேன்

கண்ணை கட்டி காட்டில் விட்டாலும் நான் கலங்குவதில்லை
கண் இருந்தும் உன்னை பார்க்க முடியல
அதை நினைச்சா அழுகையை அடக்க முடியல

அது உனக்கு தெரியலையா
என் மனசு தான் உனக்கு புரியலையா

அந்த கடவுளுக்கும் என் கண்ணீர் தெரியலையா
என் காதலியை சேர்த்து வைக்க தோணலையா

உன்னை நினைத்தால் மகிழ்ச்சியும் வருது
உன்னை நினைத்தால் சோகமும் வருது

உன்னுடைய ஒரு கண்ணில் உன் தந்தை
உன்னுடைய் மறு கண்ணில் உன் காதல்

ஒரு கண்ணைக் காப்பதற்கு
மறு கண்ணை ஏன் நீ கொள்கிறாய்?

ஒரு கண்ணுடன் வாழ்ந்து நீ
என்ன செய்ய போகிறாய்?

இரு கண்களையும் காத்திடு
என் உயிரை நீ காத்திடு

என்னுடன் வாழ்ந்த நாளை எண்ணிடு
அந்த மகிழ்ச்சியை உணர்ந்திடு
அது திரும்ப கிடைக்குமா என்று எண்ணிடு

உன்னை நினைத்தால் மகிழ்ச்சியும் வருது
உன்னை நினைத்தால் சோகமும் வருது

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages