Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

புதன், 10 நவம்பர், 2010

பார்வை

வானத்தில் இருந்து வந்தவள் நீயா
பார்வையில் என்னை வதைப்பது ஏனோ

மற்றவரிடம் கிளி போல்
இனிமையாய் பேசுகிறாய்

என்னை பார்த்தால் மட்டும்
காகம் போல் ஏன் கறைகிறாய்

உன்னை நான் பார்க்கிறேன் என்று தெரிந்தும்
தெரியாதது போல் நடிப்பது ஏனோ?

அது தெரிந்தும் உன்னை நான்
தொடர்ந்து பார்ப்பது தான் ஏனோ?

இது தான் காதலில் முதல் படியோ?
இன்னும் எத்தனை படி தாண்டணுமோ
உன் மனதில் ஒரு இடம் பிடிக்க?

எப்பொழுதும் உன் பார்வை இருப்பது
நாவல்களின் மேல் மட்டும் தானே!

அது என்னை போல் வருமா
அது உன்னை என்னை போல் நேசிக்குமா?

நான் உன்னை நேசிப்பது போல்
இவ்வுலக்கில் உன்னை யார் நேசிப்பார்?
அதை நீ கொஞ்சம் சிந்தித்து பார்
உன்னுடைய சிந்தனையில் நிறுத்திப் பார்
உன்னுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் பார்

வானத்தில் இருந்து வந்தவள் நீயா
பார்வையில் என்னை வதைப்பது ஏனோ

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages