Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

போராடு

நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது
மனதில் மட்டும் தெம்பு இருந்தது

கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது

வாழ்க்கை ஒரு சக்கரம் அதில்
நம்பிக்கை தான் அச்சாணி

இன்று உணவகத்தில் சுத்தம் செய்கிறான்
நாளை முதலாளி ஆகலாம் என்ற நம்பிக்கையில்

உழவன் உழுது பயிர் வைக்கிறான்
நாளை அது விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில்

குழந்தை துணையுடன் நடக்க முயற்சி செய்கிறது
நாளை யார் துணையும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கையில்

நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது
மனதில் மட்டும் தெம்பு இருந்தது

கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது

மனதில் வரும் வலி
விரைவில் தீரும் என்று நம்பு

தோல்வி இல்லாத வாழ்க்கை
இனிப்பு இல்லாத பாயாசம்

வாழ்க்கை ஒரு ஏணி அதில்
ஏற்ற இறக்கம் நிச்சயம்

ஆயிரம் வேலை செய்யலாம் ஆனால்
குறிக்கோள் ஒன்றாக வை

ஆயிரம் வேலைகளும் குறிக்கோளை அடைய
உதவி செய்திட வை

நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது
மனதில் மட்டும் தெம்பு இருந்தது

கஷ்டப்பட்டு வேலை செய்தால்
பின்னால் பலன் உண்டு என்று சொன்னது

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages