Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 24 மே, 2010

மகனே என் மகனே


மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்

உன்னை கண்டாலே என் உள்ளம் உருகுதே
உன்னை கண்டாலே என் கண்கள் மயங்குதே

உன் குரலை கேட்கவே என் காது துடிக்குதே
உன் நடையை காணவே என் மனம் ஏங்குதே

உன் சிரிப்பை கண்டாலே கல்லும் கறையுமே
உன் பேச்சை கேட்டாலே இன்பம் பெருகுமே

உன் கோபம் பார்க்கவே நான் கோபம் கொண்டேனே
உன் அழுகை கண்டாலே நான் செத்து போகிறேனே

மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்

இன்பம் பாதி, துன்பம் பாதி இருக்கும் வாழ்க்கை
அது தான் உலக நியதி

இன்பத்தில் வானிற்கு போகாதே
துன்பத்தில் அகல பாதாலத்திற்கு போகாதே

உன் தந்தை போல புகழ் பெற வேண்டும்
உன்னை நம்பி வருவோர்க்கு உதவிட வேண்டும்

ஆசிரியரை தெய்வம் போல் மதித்திடு
உனக்குள் மிருகம் வந்தால் கொன்றிடு

பணத்திற்கு நீ மயங்காதே
பாசத்திற்கு நீ வளையாமல் இருக்காதே

மகனே மகனே என் மகனே
நீ உலகம் போற்றும் மனிதனாவாய்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages