Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

மனம்


நம்பிக்கையுடன் இருக்கும் போது மலை கூட எறும்பு என்று கூறும் மனம்,
நம்பிக்கை இல்லாத போது எறும்பு கூட மலை என்று கூறுகிறது.

உறவுகளின் பெருமையை அவர்களிடம் இருக்கும் போது உணராத மனம்,
அவர்களின் பெருமையை உணர்ந்து ஏங்குகிறது அவர்கள் அருகில் இல்லாத போது.

வெற்றியில் மிதக்கும் போது கடவுளை நினைக்காத மனம்,
தோல்வியில் துடிக்கும் போது கடவுளை நினைக்க மறப்பதில்லை,

உடன் ஊர் சுற்றுபவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என்று கூறிய மனம் இன்று,
கீழே விழும் போது தூக்கிவிடுபவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என்று கூறுகிறது.

சினிமாவுக்கு வந்தால் தான் உண்மையான காதலி என்று கூறிய இதயம் இன்று,
அழும் போது தாய் போல் ஆறுதல் கூறுபவளே உண்மையான காதலி என்று கூறுகிறது.

தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஆணவத்தில் இருந்த மனம் இன்று
எல்லாம் தெரிந்த ஒருவன் இறைவன் மட்டும் தான் என்கிறது.

தூக்கம் வரும் காலத்தில் ஆட்டம் போட வைத்த மனம் இன்று
தூக்கம் வராமல் ஏங்குகிறது.

மனம் என்றுமே விளங்க முடியாத ஒன்று
அதை அடக்கி ஆளுபவன் கடவுளை போன்றவன்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages